Wednesday, May 1, 2013

உழைப்பாளர் தினம்

இன்னைக்கு காலைல ஃப்ரண்டு வீட்டுக்கு பைக்ல போயிட்டிருக்கும் போது,
எங்கேயோ இருந்து வந்த ஒரு மஞ்சள் பட்டாம்பூச்சி, ஹெல்மெட்ல அடிபட்டு செத்துப்போயிடிச்சு.
அந்த மஞ்சள் நிறம் மட்டும் ஒரு கறை மாதிரி அப்டியே இருந்தது.
ஊர்ல வழக்கமா நடக்கும் ஒரு விசயம்தான். பட்டாம்பூச்சி, தும்பி, இன்னும் பெயர் தெரியாத பல பூச்சிகள். ஒரு தடவ வண்டு ஒண்ணு செருப்புக்குள்ள நுழைஞ்சு, முத்தம் கொடுத்ததுல கட்டை விரல் 2 நாள் வீங்கி.. விடுங்க, அத சொல்ல வரல.

பெங்களூர்ல இது தான் முதல் தடவ. இத்தனைக்கும் பெரு நகரங்களை எடுத்துகிட்டா இங்க மட்டும் தான் மரங்கள், பூங்கான்னு கொஞ்சம் பசுமையா இருக்குர ஊரு. இங்கயே பூச்சி இனங்களை பார்க்குரது ரொம்ப கம்மியா இருக்கு. கொசுவும், கரப்பானும் மட்டும்தான் எல்லா நகரங்களிலும் சுலபமா உயிர் வாழுது.

காரணம் ரொம்ப சிம்பிள். இவைகளும் நம்மள மாதிரி தான். தான் மட்டும் வாழ்ந்தா போதும்ன்னு நினைக்கிரது மட்டுமில்லாம, தனக்கு உணவு கொடுக்குற உயிரினங்களையே அழிக்கும் நன்றியுள்ள ஜீவராசிகள்.

இயற்கையோட உண்மையான உழைப்பாளர்களை கொன்னுட்டு, நாம உழைப்பாளர் தினம் கொண்டாடுரோம்.
வேடிக்கையான விஷயம் என்னன்னா, அந்த பூச்சி இனங்கள் எல்லாம் அத்தியாவசிய தேவைக்கு உழைக்கிற(உயிர் வாழ) ஜீவன்கள்.
நம்ம ஆடம்பரத்துக்கு உழைக்கிற ஆட்கள்.

இனிய உழைப்பாளர் தின நல்-வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment