Wednesday, January 13, 2016

My questions on Jallikattu

மிருகவதை?!
ஒரு மாட்டை சட்டப்படி என்னவெல்லாம் செய்யலாம்?
1. காயடிக்கலாம் - அதாவது எந்த மருத்துவ உபகரணமும் இல்லாம, மயக்கமருந்து குடுக்காம...
2. பின்னாடி சூடு வைக்கலாம்.. உரிமையாளர் முத்திரை
3. வண்டி இழுக்க வைக்கலாம்.. சாட்டை வச்சி அடிக்கலாம்.
4. மாடுகளின் தேவை
(பால்மடி வத்தி, பாலாறு மாதிரி ஆன பசு, ஊர்ல இருக்குற எல்லா சுமையையும் இழுத்து முடிச்சி தன் எடைய சுமக்கறதே கஷ்டம்-ன்னு சுத்துற எருது, ஊர்ல இருக்குற எல்லா பசுவையும் ஏறி முடிச்ச பொலிகாளை)
எல்லாம் முடிஞ்ச அப்புறம், கொன்னு திங்கலாம்.
இதெல்லாம் சட்டப்படி தப்பில்லை. ஆனால் சல்லிக்கட்டு மட்டும் தப்பு. மிருகவதை.
வீரம்?!
1. அந்த சூழல் எருதுக்கு விளையாட்டா? வதையா?
இன்னும் சரியா கேக்கணும்னா, மாடு மிரண்டு ஓடுதா? இல்ல, மூக்கணாங்கயிறு அறுத்த சந்தோசத்துல விளையாடுதா?
2. எல்லா மாடும் கண்டிப்பா விளையாட வாய்ப்பில்ல. பயந்து மிரண்டு போன மாட்ட களத்துக்கு உள்ள விடலாமா? கூடாதா? மெடிக்கல் டெஸ்ட் மாதிரி இதுக்கு ஏதாவது செக் பாயிண்ட் இருக்கா?
3. காயம்பட்ட வீரர்களுக்கு மருத்துவ உதவி (பணம்) எப்படி? தன் சொந்த செலவா? உயிரை விட்ட வீரர்கள்? அவங்க குடும்பம்?
4. இந்த வீர விளையாட்டு, போர் இல்லாத அமைதி காலங்களில் முதல் ரத்தம் பார்த்துப் பழக ஒரு வாய்ப்பு-ன்னு சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். அப்டின்னா, இது போருக்கு இணையான ஒன்று. இறந்த போர் வீரர்களுக்கு கெடைக்கிற எல்லாமே, இறந்த மாடு பிடி வீரருக்கும் கெடைக்கணும் இல்ல?
5. கண்டிப்பாக நாட்டு மாட்டினம் காப்பாற்றப்படனும். சரியான இனவிருத்திக் காளையை அடையாளம் காட்ட, வேற எதுவும் வழிமுறையை காட்டுனா, அத எந்த அளவுக்கு ஏத்துக்குவீங்க?
ஒரு பக்கம், பால் அரசியல் பயமுறுத்தி பீட்டா-வை தூக்கி எரிய சொல்லுது. இன்னொரு பக்கம் வாடிவாசல் வீடியோ பாத்தா வயிறு கலங்குது..
தெளிவா எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்க முடியல.
விளக்கம் யார் வேணா குடுங்க..
‪#‎IsupportJallikattu‬ ‪#‎BanJallikattu‬ ‪#‎Notsurewhattodo‬

No comments:

Post a Comment